சென்னை குறள் :
1. இரண்டாம் மாடியில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
நீச்சல் அடித்தே போவார்.
2. ஊரில் கட்டிய வீட்டில் நீர் வடியும் வடியாதே
ஏரியில் கட்டிய வீட்டில்.
3. எந்த நிலம் யார் யாரிடம் வாங்கினும் அந்நிலம்
நீர் நிலையா என காண்பது அறிவு....
வரலாறு காணாத கனமழையால் அடையாறு ஆற்றில் செல்லும் வெள்ளநீர் ஜெயா, புதிய
தலைமுறை, வேந்தர் ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்குள் புகுந்துள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன. இதன்காரணமாக ஜெயா குழும சேனல்களின் ஒளிபரப்பு தற்காலிமாக
நிறுத்தப்பட்டுள்ளது. புதிய தலைமுறை சேனலின் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
வேந்தர் டிவி அலுவலகத்திற்குள்ளும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வழக்கமான ஒளிபரப்பு
நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்க்ரோலிங் போகிறது. அதேநேரத்தில் பாடல்கள் ஒளிபரப்பாகின்றன புதிய
தலைமுறை சேனலின் நேரலை நிறுத்தப்பட்டு ஆவணப்படம் ஒளிபரப்பானது அதுவும் சற்று நேரத்தில்
நிறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment